Wednesday, 20 August 2014
சவூதியில் மீண்டும் கெடுபிடி !
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்றும் விதமாக கடந்த வருடம் சவூதி அரசு நிதாகத் என்ற தொழிலாளர் கொள்கையின் மூலம் அவரவர்களின் நிலையை சரி செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி, பலர் தமது நிலையை சரி செய்தனர்.
மேலும் சரி செய்ய இயலாதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.
இந்த நிலையில் கெடுக் காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை சவூதி தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், கைது செய்து நாடு கடத்தினர்.
கடந்த வருடமே கெடுக் காலம் முடிந்தது எனினும் இன்னும் சிலர் தமது நிலையை சரி செய்துகொள்ளாமல் இருப்பதாக அறிந்து, மீண்டும் சோதனை முறையை சவூதி அரசு முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் படுவார்கள். எனத்தெரிகிறது. மேலும் தாம் செய்யும் வேலை என்ன என்பதை குடியுரிமை அட்டையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குடியுரிமை அட்டையில் இல்லாத வேறொரு வேலை செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது எச்சரிக்கை விடுத்து உடன் சரி செய்துகொள்ள கால அவகாசம் கொடுக்கப் படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே அதிரையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களது நிலையை சரிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சரி செய்ய இயலாதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.
இந்த நிலையில் கெடுக் காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை சவூதி தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், கைது செய்து நாடு கடத்தினர்.
கடந்த வருடமே கெடுக் காலம் முடிந்தது எனினும் இன்னும் சிலர் தமது நிலையை சரி செய்துகொள்ளாமல் இருப்பதாக அறிந்து, மீண்டும் சோதனை முறையை சவூதி அரசு முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் படுவார்கள். எனத்தெரிகிறது. மேலும் தாம் செய்யும் வேலை என்ன என்பதை குடியுரிமை அட்டையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குடியுரிமை அட்டையில் இல்லாத வேறொரு வேலை செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது எச்சரிக்கை விடுத்து உடன் சரி செய்துகொள்ள கால அவகாசம் கொடுக்கப் படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே அதிரையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களது நிலையை சரிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment